ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் ஜவுளிபூங்காவுக்கான அறிவிப்பு வெளியிட்ட இடத்தில் சாயப்பட்டறை ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் டால்மியா போர்ட் அருகே 880 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளிபூங்கா அமைக்கப்படுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வேலைவாய்ப்பு பெருகுவதோடு உள்ளூர் பகுதிகளும் செழிக்கும் என்பதால் ஜவுளி பூங்காவை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஜவுளிப்பூங்கா அமையவிருந்த இடத்தில் சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு ஜாகீர் அம்மா பாளையம், புளியம்பட்டி, குள்ள கவுண்டனூர், வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாயப்பட்டறை ஆலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட அமைச்சர் ராஜேந்திரனிடமும் மட்டுமல்லாது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் சாயப்பட்டறை ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்களின் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடியை வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தியுள்ளனர்.

சாயப்பட்டறை ஆலை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இன்று வரை இத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களின் எதிர்ப்பையும் மீறி சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தொடர்ந்தால், தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பல்வேறு கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: dyeing plantDalmia Port in Zakeer AmmapalayamKulla KoundanurVellakkalpatti.salemPuliyampattitextile park
ShareTweetSendShare
Previous Post

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

Next Post

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies