கர்நாடகாவில் தொழிலதிபரை கடத்தி கொலை செய்தவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
பொம்ம சந்திரா பகுதியைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி, சீட்டு தொழில் நடத்தி நஷ்மடைந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 4 ஆம் தேதி கித்தனஹள்ளி பகுதிக்கு சென்று மாதேஷ் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி அவரை கொலை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரவி பிரசாத் ரெட்டி, கடந்த 6ஆம் தேதி தொழிலதிபர் பாலப்பாரெட்டி என்பவரை கடத்தி 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கிடைக்காததால் அவரை வெட்டி கொலை செய்து விட்டு, உடலை ஒசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் வீசிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
















