பொலிவியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வலதுசாரி அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்றார்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக ‘மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம்’ கட்சி ஆட்சியில் இருந்தது.
லுாயிஸ் ஆர்ஸ் தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய தேவைகளே கிடைக்காத நிலை ஏற்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் பொலிவியாவில் கடந்த மாதம் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. 2 கட்டங்களாக நடந்த தேர்தலில், 54 சதவீத வாக்குகள் பெற்று கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தலைநகர் லா பாஸில் நடைபெற்ற விழாவில் ரோட்ரிகோ பாஸ் அதிபராகப் பதவியேற்றார்.
















