பிரமாண்ட புவியியல் அமைப்பு காரணமாக இந்தியா உலக நாடுகளின் விருப்பமான கூட்டாளியாக இருப்பதாக முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்தியாவின் புவியியல் அமைப்புகுறித்து பேசிய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், இந்தியாவின் புவியியலில் கடல்சார் சக்தி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று கூறினார்.
இந்திய பெருங்கடல், பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் புவியியல் அமைப்பு காரணமாக உலக நாடுகளின் விருப்பமான கூட்டாளியாக இந்தியா இருப்பதாகவும் கூறினார்.
















