நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமன் இசையில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார்.
இப்படத்தை லைகா நிறுவனமும், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
















