ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சித்தோடு மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவை சேர்ந்த தம்பதி துடைப்பம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 5 வயதில் அனுக் மற்றும் ஒன்றரை வயதில் வந்தனா என்ற இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி இரவில் உறங்கிக் கொண்டிருந்த வந்தனாவை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்த சித்தோடு போலீசார், 25 நாட்களுக்குப் பிறகு நாமக்கல்லில் குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையைக் கடத்தியவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















