யார் தூண்டுதலில் டெல்லி தீவிரவாத தாக்குதல்? : பயங்கரவாதத்தின் பின்னணியில் துருக்கி!
Jan 14, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யார் தூண்டுதலில் டெல்லி தீவிரவாத தாக்குதல்? : பயங்கரவாதத்தின் பின்னணியில் துருக்கி!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு என்ன காரணம் ? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.

எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட துருக்கி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துகளை முன்வைத்தது. ஆனால் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் அளவுக்கா செயல்படும்? என்ற சந்தேக பார்வை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு மேலோங்கி உள்ளது. செங்கோட்டை அருகே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதும், அனைவரின் சந்தேகமும் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

இந்திய புலனாய்வு அமைப்புகளும் அந்த அடிப்படையில் தான் விசாரணையை முடுக்கி விட்டன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் உமர் முகமது, முஸம்மில் ஷகில் ஆகியோரின் பின்னணியை ஆராயும்போது, அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதாவது, துருக்கி தலைநகர் அங்காராவில், டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டுள்ளது. உமர் முகமது மற்றும் முஸம்மில் ஷகில் ஆகியோரின் பாஸ்போர்டை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரும் துருக்கி சென்று வந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

அங்காராவில் உகாசா எனும் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதியுடன் மருத்துவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தியதை கண்டறிந்துள்ள அதிகாரிகள், துருக்கி பயணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட டெலிகிராம் குரூப் மூலம் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். துருக்கி பயணத்திற்கு பிறகு மருத்துவர்கள் இருவரும் ஃபரிதாபாத் மற்றும் சகரான்பூர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்கான ஆதாரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் திரட்டியுள்ளனர். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக, உமர் முகமது செல்பொனுக்கு துருக்கியில் இருந்து அழைப்புகள் வந்ததா? என்ற கோணத்திலும் விசாரணையை அதிகாரிகள் தீவிரபடுத்தியுள்ளனர்.

ஒரு புறம் சரியான ஆதாரங்களைத் திரட்ட இந்திய அதிகாரிகள் மும்முரமாகக் களமிறங்கி இருந்தாலும், துருக்கி இந்தச் செயலைச் செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதற்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் முக்கிய காரணமாக இருக்கிறார். ஏனென்றால் காஷ்மீர் விவகாரத்தில், உண்மையின் பக்கம் நிற்காமல் பாகிஸ்தான் துணை நிற்கும் எர்டோகன், ஜநா போன்ற சர்வதேச அமைப்புகளில் தேவையின்றி இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருகிறார். அதுமட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கொடுத்தது யார் என்றால் எர்டோகன் தான்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் நிலைநிறுத்தியிருக்கும் பெரும்பாலான தடவாளங்கள் துருக்கி வழங்கியது தான். இப்படி அனைத்து வழியிலும் துருக்கிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ள நிலையில், டெல்லி தாக்குதல் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என எர்டோகன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவின் சந்தேகப் பார்வை அடிப்படை ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை மறைக்க எர்டோகன் அரசு தவறிவிட்டது. டெல்லியில் நிகழ்ந்ததை கார் வெடிப்புச் சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ள துருக்கி தூதரகம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்ததை மட்டும் பயங்கரவாத தாக்குதல் எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இரட்டை வேடத்தால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் வழியில் துருக்கியும் இணைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.

Tags: delhiதுருக்கிdelhi car blastWho instigated the Delhi terror attack?: Turkey behind terrorismடெல்லி தீவிரவாத தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

H1-B விசா விவகாரத்தில் U-TURN அடித்த ட்ரம்ப் – குறைய போகிறதா H1-B விசா கட்டணம்?

Next Post

அல் ஃபலா பல்கலை. நிறுவனர் மோசடி வழக்கில் திகார் சிறை சென்றவர் : டெல்லி தீவிரவாத தாக்குதலில் அதிர வைக்கும் பின்னணி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies