பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!
Jan 14, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் மறைத்து நிறுத்தப்பட்டிருந்த மாருதி பிரெஸ்ஸா காரை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

டெல்லி செங்கோட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், நாசகார வேலையில் ஈடுபட்ட ஒருவரையும் விட்டு விடாமல் வேட்டையாடப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து, 10 பேர் அடங்கிய என்ஐஏ அதிகாரிகள் குழு, விசாரணையைத் தீவிரப்படுத்தி, மருத்துவர் என்ற போர்வையில் சதிவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கைது செய்து வருகின்றனர்.

மிகப்பெரும் தாக்குதல் சம்பவத்தை நடத்த முடியாத விரக்தியில், டெல்லியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில், 13 உறவுகளை இழக்க நேர்ந்தாலும், அடுத்தடுத்த சதித்திட்டங்கள் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளன. அதன்படி, தீவிரவாத தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் என்ஐஏ வசம் சிக்கி வருகின்றன. டெல்லி தாக்குதலுக்காக ஐ20 காரை உமர் நபி பயன்படுத்திய நிலையில், அவரது பெயரிலேயே பதியப்பட்ட FORD ECOSPORT காரை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

தற்போது அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் டவர் 17 அருகே மறைத்து நிறுத்தப்பட்டிருந்த மாருதி பிரெஸ்ஸா காரையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மருத்துவர் முஸம்மில் ஷகீலின் அறையில் கிடைத்த டைரியில் கார்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கார்களை மறைத்து வைக்க உதவிய வாசித் என்ற நபரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என்ஐஏ அதிகாரிகள்.

ஃபரிதாபாத் அருகே உள்ள தவுஜ் கிராமத்தில், மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் வாசித்திடம் இருந்து பல விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 9-ம் தேதி 3,000 கிலோ வெடிமருந்துகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், அது தொடர்பாகவும் விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது.

நூ மாவட்டத்தில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் வாங்கியது உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளரான தினேஷ் குமார் என்ற நபரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெடிமருந்து விற்பனையின் போது ஏன்? எதற்கென்று விவரங்கள் கேட்காமல், அவர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில், 13 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: delhiNiaஎன்ஐஏdelhi car blastNIA tightens grip: Cars continue to be seized in Delhi blast investigation!பிடியை இறுக்கும் என்ஐஏ
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

Next Post

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies