தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு - 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
Mar 15, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 15, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வினை சுமார் நான்கரை லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, டெட் தேர்​வில் இடை நிலை ஆசிரியர்​களுக்​கு இன்று வினாத்தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 2ஆம் வினாத்தாள் தேர்வும் நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள 367 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை ஆயிரத்து 241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 தேர்வர்களும் எழுதுகின்றனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்வர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சென்னையில் 23 தேர்வு மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற வினாத்தாள் 1 தேர்வினை 23 மையங்களில் ஆறாயிரத்து 56 பேர் எழுதினர். ராயப்பேட்டை பீட்டர் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 220 பேர் தேர்வை எழுதினர்.

இதனை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை நடைபெறும் வினாத்தாள் 2 தேர்விற்காக சென்னையில் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆயிரத்து 932 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

நெல்லையில் 11 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் 1 தேர்வை 69 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் மூன்றாயிரத்து 550 பேர் எழுதினர். தேர்வை ஒட்டி, தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Tamil NaduTETTeacher Eligibility examTET EXAM
ShareTweetSendShare
Previous Post

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

Next Post

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies