முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!
Nov 15, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Nov 15, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்துவிட்டு, எடையைச் சரிசெய்ய சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சாந்தகுமார் என்பவர் முந்திரி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முந்திரி கொட்டைகளை வாங்கி வந்து பருப்பை தனியாகப் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் சாந்தகுமார், தனியார் வாடகை லாரிகள் மூலம் முந்திரி கொட்டைகளை தனது தொழிற்சாலைக்கு எடுத்து வந்துள்ளார்.

அவ்வாறு, முந்திரி கொட்டைகளை ஏற்றி வரும் ஓட்டுநர்கள் அளிக்கும் தனியார் எடை மேடையின் அளவை சரிபார்த்து அவர் இறக்கி வந்துள்ளார்.

இதுபோன்று லோடுகள் வரும்போது அடிக்கடி எடை குறைவது போலத் தோன்றியதால், தூத்துக்குடியில் இருந்து மூன்று லாரிகளில் ஏற்றி வரப்பட்ட முந்திரி கொட்டைகளை இறக்கியபோது 17 மூட்டைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், முந்திரி கொட்டைகளுக்குப் பதிலாக சிமெண்ட் கற்களை ஏற்றிவந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஓட்டுநர்கள் சாந்தகுமார், மதியழகன், சந்துரு ஆகியோரை பிடித்து போலீசில் அவர் ஒப்படைத்தார்.

இதனை அடுத்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், திருடிச் செல்லப்பட்ட முந்திரி கொட்டைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Case registered against lorry drivers who smuggled and sold cashew nuts
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

Related News

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies