இந்தியா - இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு - விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 16, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா – இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடையும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, அதிநவீன பாதுகாப்பு தளவாடங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் நாட்டுடன் 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய மதிப்பிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, எதிரி நாட்டு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் மற்றும் இஸ்ரேலின் AERO SPACE INDUSTRIES நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் MR-SAM ஏவுகணைகள், ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அதிநவீன RADIO FREQUENCY உபகரணங்கள் மற்றும் ரேடார்கள் பொறுத்தப்பட உள்ளன.

ஏவுகணைகள் மட்டுமல்ல, ட்ரோன்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்து இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழித்து எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக MR-SAM ஏவுகணைகள் விளங்கும் என ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என தெரிகிறது. போர்க் களத்திற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும் என்பதால், இந்த எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதால், இஸ்ரேல் AERO SPACE INDUSTRIES நிறுவனம் இந்தியாவிலேயே ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.

கடினமான வானிலை சூழ்நிலைகளிலும், எலெட்ரானிக் ஜாமருக்கும் கட்டுப்படாத வகையிலும், MR-SAM ஏவுகணைகள் தயாரிக்கப்படுவது, இந்திய பாதுகாப்புத்துறையில் ஓர் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவிடம் ஆகாஷ் மற்றும் எஸ்- 400 வான்பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்கனவே கைவசம் உள்ள நிலையில், MR-SAM ஏவுகணைகள் இந்திய முப்படைகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ரக ஏவுகணைகளால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், போர் விமானங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. தரையில் இருந்தவாறே இலக்குளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

வரும் 23-ம் தேதி ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதில் நேரடியாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வான் எல்லையை ஆகாஷ், எஸ்-400 உடன் சேர்ந்து MR-SAM ஏவுகணையும் பாதுகாக்க உள்ளதால், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கிலி ஏற்பட்டுள்ளது.

Tags: MR-SAM missilesIsrael's AERO SPACE INDUSTRIESIndia's Bharat DynamicsIndiacentral governmentIsraeldefence agreement
ShareTweetSendShare
Previous Post

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

Next Post

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies