வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!
Jan 14, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் கட்டுமானங்களும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வனவிலங்குகள் தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

அதிலும் யானைகளின் வழித்தடங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருப்பதால், உணவுக்கு வழியின்றி ஊருக்குள் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களின் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

மனிதர்களை விலங்குகளிடமிருந்தும், விலங்குகளை மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே மனித விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த 1200-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்பு காவலர்களில் சுமார் 800 பேர் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அப்பணிக்கு தேவையான மாற்று காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஓய்வுபெற்ற வனப்பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள், விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிலிடமிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதிக்கு தேவையான வேட்டைத் தடுப்பு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: NEWS TODAYtoday newsspecial storyShortage of anti-poaching guards: Sadness due to increase in human-animal conflict
ShareTweetSendShare
Previous Post

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

Next Post

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies