விதவிதமான விளக்குகள் - களைகட்டும் கார்த்திகை தீபம்!
Sep 12, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

இப்படி சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி சூடிபிடித்துள்ளது. மேல்சித்தூர், குறுக்கப்பட்டி, ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு, மயிலம்பட்டி, தேவூர், கோனேரிப்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது அகல் விளக்குகள் மற்றும் கோடை காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான பானைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. ஒருமுகம், இருமுகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம், பாவை விளக்கு, மயில் விளக்கு, அன்னவிளக்கு என விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாகச் சாதாரண அகல் விளக்கு 70 பைசாவுக்கும், 100 விளக்குகள் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி அகல்விளக்குகள் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டாலும் சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் எடப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

இதனால் அகல் விளக்குகள் தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும் கூடுதலாகச் செலவு செய்து மண் வாங்கும் தொழிலாளர்கள் விளக்குகளைத் தயாரித்து வருகின்றனர். ஏரியில் போதுமான அளவு களிமண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும், மின்சாரத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையும் அகல் போல் ஒளிர வேண்டும் எனக் காத்திருக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags: karthigai deepamTn newsa lamp that lights up with various lightsகளைகட்டும் கார்த்திகை தீபம்
Share
Tweet
SendShare
Previous Post

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Next Post

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies