வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் கட்டுமானங்களும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வனவிலங்குகள் தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

அதிலும் யானைகளின் வழித்தடங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருப்பதால், உணவுக்கு வழியின்றி ஊருக்குள் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களின் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

மனிதர்களை விலங்குகளிடமிருந்தும், விலங்குகளை மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே மனித விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த 1200-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்பு காவலர்களில் சுமார் 800 பேர் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அப்பணிக்கு தேவையான மாற்று காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஓய்வுபெற்ற வனப்பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள், விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிலிடமிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதிக்கு தேவையான வேட்டைத் தடுப்பு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: today newsspecial storyShortage of anti-poaching guards: Sadness due to increase in human-animal conflictNEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

Next Post

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies