வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!
Apr 29, 2026, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வனப்பகுதியில் போதுமான வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததன் காரணமாக மனித விலங்குகள் மோதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை எல்லையாகக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் கட்டுமானங்களும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திக் கொண்டிருந்த வனவிலங்குகள் தற்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளாகவும் ஊடுருவத் தொடங்கியுள்ளது.

அதிலும் யானைகளின் வழித்தடங்கள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிக்கப்பட்டிருப்பதால், உணவுக்கு வழியின்றி ஊருக்குள் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் என்பதால் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தங்களின் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

மனிதர்களை விலங்குகளிடமிருந்தும், விலங்குகளை மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய வனத்துறையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையே மனித விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த 1200-க்கும் அதிகமான வேட்டைத் தடுப்பு காவலர்களில் சுமார் 800 பேர் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அப்பணிக்கு தேவையான மாற்று காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதாக ஓய்வுபெற்ற வனப்பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள், விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிலிடமிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் யானை தாக்கி ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, வனப்பகுதிக்கு தேவையான வேட்டைத் தடுப்பு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: NEWS TODAYtoday newsspecial storyShortage of anti-poaching guards: Sadness due to increase in human-animal conflict
ShareTweetSendShare
Previous Post

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

Next Post

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Related News

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies