விதவிதமான விளக்குகள் - களைகட்டும் கார்த்திகை தீபம்!
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விதவிதமான விளக்குகள் – களைகட்டும் கார்த்திகை தீபம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டியுள்ளன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

இப்படி சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி சூடிபிடித்துள்ளது. மேல்சித்தூர், குறுக்கப்பட்டி, ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு, மயிலம்பட்டி, தேவூர், கோனேரிப்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது அகல் விளக்குகள் மற்றும் கோடை காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான பானைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. ஒருமுகம், இருமுகம், மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம், பாவை விளக்கு, மயில் விளக்கு, அன்னவிளக்கு என விதவிதமான விளக்குகளைத் தயாரிக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாகச் சாதாரண அகல் விளக்கு 70 பைசாவுக்கும், 100 விளக்குகள் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி அகல்விளக்குகள் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டாலும் சில இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் எடப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

இதனால் அகல் விளக்குகள் தயாரிக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும் கூடுதலாகச் செலவு செய்து மண் வாங்கும் தொழிலாளர்கள் விளக்குகளைத் தயாரித்து வருகின்றனர். ஏரியில் போதுமான அளவு களிமண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும், மின்சாரத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையும் அகல் போல் ஒளிர வேண்டும் எனக் காத்திருக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags: karthigai deepamTn newsa lamp that lights up with various lightsகளைகட்டும் கார்த்திகை தீபம்
ShareTweetSendShare
Previous Post

வேட்டை தடுப்பு காவலர்கள் பற்றாக்குறை : மனித-விலங்குகள் மோதல் அதிகரிப்பால் துயரம்!

Next Post

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies