சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி - ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!
Jan 14, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி – ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியாவில் நடந்த கோர வாகன விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 42 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஹைதராபாத்தில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகியிருப்பது நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

சவுதி அரேபியாவில் உள்ள மெதினா நகருக்கு சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 43 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், டீசல் டேங்கரும் நேருக்கு நேர் மோதிக் கோர விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமான நிலையில், அதிலிருந்த பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால், அவர்கள் அனைவரும் உயிர் தப்ப வழியின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே நேரத்தில், இந்த விபத்தில் முகமது அப்துல் ஷொயப் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவில் இருந்து மெதினாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட போது இந்த விபத்து அரங்கேறியதாகவும், இதில் இந்தியாவைச் சேர்ந்த 42 பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும் அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட் உள்ளது.

அவர்களில் ஹைதராபாத்தில் இருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் உட்பட, 18 பேர் பலியாகி உள்ளது நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் அனைவரும் வரும் 22-ம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாக, உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு முன்பு வரை அவர்கள் தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிட்ட உறவினர்கள், ஒரே விபத்தில் 3 தலைமுறையினர் அடங்கிய 18 பேரை பறி கொடுத்திருப்பது தங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நாசீருத்தீன், அவரது மனைவி அக்தர் பேகம், மகன் சலாவுதீன், மகள்கள் அமீனா, ரிஸ்வானா மற்றும் ஷபானா மற்றும் அவர்களின் பிள்ளைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் விபத்தில் பலியான நிலையில், அந்தப் பகுதி நாலாப்புறங்களிலும் அவர்களது உறவினர்களின் அழுகுரல் ஓலங்கள் எதிரொலித்தன.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்திய தூதரகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, இந்தக் கோர விபத்தில் அதிகளவு இந்திய பயணிகள் உயிரிழந்துள்ளதால், ஜெட்டாவில் உள்ள தூதரகமும் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை நிறுவி, 80024 – 40003 என்ற அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புனித யாத்திரையாகத் தொடங்கிய இந்தப் பயணம், பல குடும்பங்களின் வாழ்வில் அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: 42 Indians killed in Saudi Arabia road accident - 18 lives lost from one familyசவுதி அரேபியா சாலை விபத்து
ShareTweetSendShare
Previous Post

நீர் மேலாண்மையைப் பாழுங்குழியில் தள்ளிவிட்ட திமுக அரசுக்கு ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

Related News

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies