6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!
Jul 31, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது பார்க்கும் பணி முடியாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்த 6 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இஸ்லாமாபாத்தால் இன்னும் சரி செய்ய முடியவில்லை. குறிப்பாக நூர்கான் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், ஆப்ரேசன் சிந்தூர் வலிமையை இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

Open source intelligence, சுருக்கமாக OSINT-ன் நிபுணர் டேமியன் சைமனின் கூற்றுகள், பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல்களால் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன… கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு அருகே இந்தியா தாக்கியதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவுகளின்படி, இந்திய படைகளால் குறிவைக்கப்பட்ட ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை துவக்கியிருப்பதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன… வடக்கு சிந்து மாகாணதில் ஜகோபாபாத் விமானப்படை தளத்தில், போர் விமானங்களை நிறுத்துமிடத்தில் இந்தியா ஏவுகணைகளை வீசியிருந்த நிலையில், அங்குக் கூரைகள் அகற்றப்பட்டு, மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இந்திய ஏவுகணைகளால் பாகிஸ்தானின் முரித், ரஃபிகி, முஷாஃப், போலாரி, காத்ரிம், சியால்கோட், சுக்கூர் போன்ற 10 விமானப்படை தளங்கள் மிகக் கடுமையான சேதங்களை சந்தித்ததை விங் கமாண்டர் வியோமிகா சிங் கடந்த மே மாதம் உறுதிபடுத்தியிருந்தார். இதனைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் ஒப்புக்கொண்டிருந்தார்.

புவி நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும், Open Source Intelligence நிபுணருமான சைமன், இந்தியா – பாகிஸ்தான் பிராந்தியத்தில் போரின்போது ஏற்பட்ட சேத விவரங்கள், செயற்கைக் கோள் படங்கள், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் போன்ற காரணத்தால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் நிலையில், அவரது தற்போதைய பதிவு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை என்பது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Tags: இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர்Indiapakistanஆப்ரேஷன் சிந்தூர்Reconstruction work continues for 6 months: Pakistan has not recovered from the impact of Operation Sindhமீளாத பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி – ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!

Next Post

சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies