6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாதங்களாக தொடரும் சீரமைப்பு பணி : ஆப்ரேஷன் சிந்தூர் பாதிப்பில் இருந்து மீளாத பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது பார்க்கும் பணி முடியாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்த 6 மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இஸ்லாமாபாத்தால் இன்னும் சரி செய்ய முடியவில்லை. குறிப்பாக நூர்கான் விமானப்படை தளத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள், ஆப்ரேசன் சிந்தூர் வலிமையை இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

Open source intelligence, சுருக்கமாக OSINT-ன் நிபுணர் டேமியன் சைமனின் கூற்றுகள், பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல்களால் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன… கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கு அருகே இந்தியா தாக்கியதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவுகளின்படி, இந்திய படைகளால் குறிவைக்கப்பட்ட ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை துவக்கியிருப்பதாகச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன… வடக்கு சிந்து மாகாணதில் ஜகோபாபாத் விமானப்படை தளத்தில், போர் விமானங்களை நிறுத்துமிடத்தில் இந்தியா ஏவுகணைகளை வீசியிருந்த நிலையில், அங்குக் கூரைகள் அகற்றப்பட்டு, மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இந்திய ஏவுகணைகளால் பாகிஸ்தானின் முரித், ரஃபிகி, முஷாஃப், போலாரி, காத்ரிம், சியால்கோட், சுக்கூர் போன்ற 10 விமானப்படை தளங்கள் மிகக் கடுமையான சேதங்களை சந்தித்ததை விங் கமாண்டர் வியோமிகா சிங் கடந்த மே மாதம் உறுதிபடுத்தியிருந்தார். இதனைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் ஒப்புக்கொண்டிருந்தார்.

புவி நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும், Open Source Intelligence நிபுணருமான சைமன், இந்தியா – பாகிஸ்தான் பிராந்தியத்தில் போரின்போது ஏற்பட்ட சேத விவரங்கள், செயற்கைக் கோள் படங்கள், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் போன்ற காரணத்தால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் நிலையில், அவரது தற்போதைய பதிவு, ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை என்பது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Tags: இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர்Indiapakistanஆப்ரேஷன் சிந்தூர்Reconstruction work continues for 6 months: Pakistan has not recovered from the impact of Operation Sindhமீளாத பாகிஸ்தான்
Share
Tweet
SendShare
Previous Post

சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி – ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!

Next Post

சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies