தமிழகத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தால் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகம் உத்வேகத்துடன் வளர்ச்சி காண்பதாக தெரிவித்தார்.
தமிழ்மொழி, இலக்கியம், பாரம்பரியத்தின் மீது பிரதமர் மோடி கொண்டிருக்கும் அன்பும், அர்ப்பணிப்பும், உலகளவில் தமிழின் பெருமையை உயர்த்தி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டம் இயற்கை மற்றும் இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
















