இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை!
Jan 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி கோவை வருகை தந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த பிரதமரைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சாமிநாதன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடியை வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மலர்களைத் தூவியும், பிரதமரைக் கண்டு கை அசைத்தபடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொடிசியா வளாகம் சென்றடைந்த பிரதமர் மோடி, இயற்கை வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த விவசாய பொருட்கள் பற்றி பிரதமர் மோடியிடம் விவசாயிகள் விளக்கினர்.

இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாகக் கலை நயம் மிக்க மாட்டு வண்டி மாதிரி வழங்கப்பட்டது.

இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவித்தார். இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கப் பாடுபடுவோருக்கு பிரதமர் மோடி விருது வழங்கிக் கௌரவித்தார். 18 விவசாயிகளுக்கு விருது வழங்கித் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் தங்கள் துண்டைச் சுழற்றிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது, பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ எனத் தோன்றுவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக விழா மேடையில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனின் உரையைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சிறு வயதில் தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், தானும் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன் எனக் கூறினார்.

பி.ஆர்.பாண்டியனின் பேச்சு அருமையாக இருந்ததெனப் புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது உரையை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்குமாறு ஆளுநர் ரவியை அறிவுறுத்தினார்.

Tags: PM Modipm modi newstn agricultureIndia will soon emerge as a hub for organic farming: PM Modi confident
ShareTweetSendShare
Previous Post

சட்டவிரோத கிட்னி விற்பனை : இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக புதர்கள் அகற்றம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies