இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி கோவை வருகை தந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த பிரதமரைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சாமிநாதன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடியை வழி நெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மலர்களைத் தூவியும், பிரதமரைக் கண்டு கை அசைத்தபடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொடிசியா வளாகம் சென்றடைந்த பிரதமர் மோடி, இயற்கை வேளாண் கண்காட்சியைப் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த விவசாய பொருட்கள் பற்றி பிரதமர் மோடியிடம் விவசாயிகள் விளக்கினர்.

இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாகக் கலை நயம் மிக்க மாட்டு வண்டி மாதிரி வழங்கப்பட்டது.

இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவித்தார். இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கப் பாடுபடுவோருக்கு பிரதமர் மோடி விருது வழங்கிக் கௌரவித்தார். 18 விவசாயிகளுக்கு விருது வழங்கித் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் தங்கள் துண்டைச் சுழற்றிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது, பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ எனத் தோன்றுவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக விழா மேடையில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனின் உரையைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சிறு வயதில் தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், தானும் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன் எனக் கூறினார்.

பி.ஆர்.பாண்டியனின் பேச்சு அருமையாக இருந்ததெனப் புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது உரையை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்து கொடுக்குமாறு ஆளுநர் ரவியை அறிவுறுத்தினார்.

Tags: PM Modipm modi newstn agricultureIndia will soon emerge as a hub for organic farming: PM Modi confident
Share
Tweet
SendShare
Previous Post

சட்டவிரோத கிட்னி விற்பனை : இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக புதர்கள் அகற்றம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies