கெடுபிடி காட்டிய ஈரான் : இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்தியது ஏன்?
Mar 15, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கெடுபிடி காட்டிய ஈரான் : இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்தியது ஏன்?

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை நிறுத்தி வைத்துள்ளது ஈரான். அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும், இந்தியாவும் ராஜதந்திர ரீதியாகச் சுமுகமான உறவைப் பேணுகின்றன. ஈரானின் கலாச்சாரம், வரலாற்று பாரம்பரியத்தைக் காண இந்திய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும நோக்கில், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது ஈரான்.

அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஈரானுக்கு விசா இல்லாமல் சென்று வர முடிந்தது. ஆனால் இந்தச் சலுகையைத் திடீரென நிறுத்திவைத்தது ஈரான்… இந்திய பயணிகள் இனி விசா இன்றி ஈரானுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த மே மாதம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேர் ஈரானில் கடத்தப்பட்டதன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள ஏஜென்ட் ஒருவர், துபாய்-ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஹுஷான்பிரீத் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோரை ஈரான் அழைத்து வந்துள்ளார்.. மே 1ம் தேதி அவர்கள் ஈரானில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் கடத்தப்பட்டுள்ளனர்… ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்டும் மிரட்டப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஈரான் அதிகாரிகள் தலையிடுமாறு, இந்தியா வலியுறுத்திய நிலையில், கடத்தப்பட்ட மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் சுற்றுலா விசாவில் ஈரான் வந்து ஏமாறுவதும், குற்றவாளிகள் விசா சலுகையை தவறாகப் பயன்படுத்தி வருவதும் தொடர் கதையானது… இதனைத் தடுக்க, சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் விசா சலுகையைத் தள்ளுபடி செய்வதாக ஈரான் அறிவித்தது.

இந்த நிலையில், ஈரான் செல்ல விரும்பும் அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சம் எச்சரித்துள்ளது. விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வழியாக மூன்றாம் நாடுகளுக்குப் போக்குவரத்து வழங்கும் முகவர்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: IndiaIranIran treated Indians harshly: Why did it stop granting concessions to Indians?இந்தியர்களுக்கு கெடுபிடி காட்டிய ஈரான்
ShareTweetSendShare
Previous Post

இடதுசாரி தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய அடி : என்கவுன்ட்டரான மாவோயிஸ்டு முக்கிய தளபதி யார்?

Next Post

வால் நட்சத்திர மர்மம் : பூமியை நோக்கி பாயும் சிறுகோள்கள் – பூமிக்கு ஆபத்தா? நாசா சொல்வது என்ன?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies