இடதுசாரி தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய அடி : என்கவுன்ட்டரான மாவோயிஸ்டு முக்கிய தளபதி யார்?
Aug 30, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இடதுசாரி தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய அடி : என்கவுன்ட்டரான மாவோயிஸ்டு முக்கிய தளபதி யார்?

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மாத்வி ஹிட்மா உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகியுள்ள நிலையில், இது இடது சாரி தீவிரவாதத்திற்கு மரண அடியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. அண்மை காலமாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதற்கேற்ப, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது பாதுகாப்புப்படை.

அதன் எதிரொலியாக இந்த ஆண்டில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் திருந்தி வாழ்கின்றனர்… இந்த நிலையில்தான் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதியான மாத்வி ஹிட்மா, அவரது மனைவி உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது.

ஆந்திரா-சத்தீஸ்கர்- ஒடிசா எல்லைக்கு அருகே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.. அதன் பேரில், ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தது. அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டு தளபதி மாத்வி ஹிட்மா, அவரது மனைவி ராஜே உள்ளிட்ட 6 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பிறந்த ஹிட்மா, மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் (PLGA) பட்டாலியன் எண் ஒன்றின் தலைவராக இருந்தவர். பஸ்தார் பிராந்தியத்திலிருந்து மாவோயிஸ்ட குழுவில் இணைந்த ஒரே பழங்குடியினராகவும் அறியப்படுகிறார்.

43 வயதான மாத்வி ஹிட்மா, பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடந்த 26 தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு 76 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட தண்டேவாடா தாக்குதல், 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் உயர் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்ட ஜிராம் தாக்குதல், 2021ம் ஆண்டு 22 பாதுகாப்புப் படையினர் பலியான சுக்மா – பிஜாப்பூர் மோதல் போன்றவற்றில் ஹிட்மா முக்கிய பங்காற்றியவர்.

ராணுவ உத்தி, கொரில்லா தாக்குதல், வனத்தை பற்றிய புரிதல் போன்ற காரணங்களால் ஆபத்தான மாவோயிஸ்டு தளபதியாகத் திகழ்ந்த இவர், இத்தனை வருடங்கள் பாதுகாப்புப் படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். மாத்வி ஹிட்மாவின் என்கவுன்ட்டர் சிபிஐ-மாவோயிஸ்டுக்கு பலத்த அடியாக, மாவோயிஸ்டு தலைமையை பலவீனப்படுத்தும நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மாவோயிஸ்டுகளை வேட்டையாடப்படும் நடவடிக்கைகளால், சிபிஐ-மாவோயிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ, தொடர் இழப்புகளைச் சந்தித்து வருகிறது… கடந்த மே மாதம் கட்சியின் பொதுச்செயலாளர் நம்பலா கேசவராவ், அக்டோபரில் மல்லோஜூலா வேணுகோபால் ராவ் ஆகியோர் சரணடைந்தது அந்த அமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆபரேஷன் சாகர் நடவடிக்கையின் தாக்கத்தால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கணிசமாகக் குறைந்த நிலையில், எஞ்சியிருக்கும் மாவோயிஸ்ட் தலைமை தப்பிக்க இடம் இல்லாமல் பரிதவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் மாவோயிஸ்டுகளின் திறன் மிகுந்த தளபதி மாத்வி ஹிட்மாவின் என்கவுன்ட்டர், எஞ்சிய மாவோயிஸ்டுகளை நடுநடுங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Biggest blow to left-wing extremism: Who is the main Maoist commander in the encounter?மாவோயிஸ்டு முக்கிய தளபதி யார்?India
Share
Tweet
SendShare
Previous Post

சத்ய சாய்பாபாவின் போதனைகள் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

Next Post

கெடுபிடி காட்டிய ஈரான் : இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்தியது ஏன்?

Related News

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies