கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணப்படும் கூட்டநெரிசல் குறித்து அண்ணாமலை, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை,
நாத்திக இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் அலட்சியத்தால், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் துன்பங்களை சந்தித்து வருவதாகவும், இது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆளும் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தால் நாடு முழுவதிலுமிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலையில் பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு ஆன்மீக தலமாகும் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய குறைந்தபட்ச விஷயம் என்னவென்றால், அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்துவதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
















