பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் "ஜே 15" : விவசாயிகளுக்கு புதிய விடியல்!
Jan 14, 2026, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ஜே 15 ரக பப்பாளி குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி, பப்பாளி விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை ரெட்லேடி எனும் பப்பாளி சாகுபடியை மேற்கொண்டிருந்த விவசாயி துரைசாமி, நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் இருந்து ஜே 15 எனும் புதிய ரக பப்பாளியை இறக்குமதி செய்து விளைவித்து வருகிறார். நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் அதிகளவு விளைச்சல் கிடைப்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடிவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 10 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி விவசாயத்தை செய்துவந்த துரைசாமிக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் தான் அவர் புதிய ரகத்தை தேடிச் செல்லும் சூழலை உருவாக்கியது. ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மூலம் ஜே 15 எனும் புதிய ரகத்தை தேர்வு செய்த விவசாயி துரைசாமிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. நோய்த் தாக்குதலின்றி விளையும் பப்பாளி பழங்களை சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட ரெட்லேடி ரக பப்பாளியை வாங்கினால், சந்தைக்குச் செல்வதற்குள்ளாகவே கெட்டு விடும் எனவும், ஜே 15 ரக பப்பாளியை பொறுத்தவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் மற்ற வியாபாரிகளும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விவசாயி துரைசாமிக்கு கிடைத்த பலனின் தொடர்ச்சியாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கவனமும் ஜே 15 பப்பாளி ரகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. தங்களுக்கான வருமானத்தோடு வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொள்ளும் வகையில் காலத்திற்கு ஏற்ப விவசாயத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Tags: பப்பாளிtoday newsTn newstn agriculture"J15" breaks new ground in papaya cultivation A new dawn for farmer
ShareTweetSendShare
Previous Post

விசாரணை வளையத்தில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் : மாணவர்களை ஏமாற்றி ரூ.415 கோடியை சுருட்டியது எப்படி?

Next Post

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies