பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் "ஜே 15" : விவசாயிகளுக்கு புதிய விடியல்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜே 15 எனும் புதிய ரக பப்பாளி சாகுபடியின் மூலம் நிறைவான விளைச்சலை விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் ஜே 15 ரக பப்பாளி குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி, பப்பாளி விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வரை ரெட்லேடி எனும் பப்பாளி சாகுபடியை மேற்கொண்டிருந்த விவசாயி துரைசாமி, நடப்பாண்டில் மகாராஷ்டிராவில் இருந்து ஜே 15 எனும் புதிய ரக பப்பாளியை இறக்குமதி செய்து விளைவித்து வருகிறார். நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் அதிகளவு விளைச்சல் கிடைப்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடிவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 10 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி விவசாயத்தை செய்துவந்த துரைசாமிக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் தான் அவர் புதிய ரகத்தை தேடிச் செல்லும் சூழலை உருவாக்கியது. ஆந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மூலம் ஜே 15 எனும் புதிய ரகத்தை தேர்வு செய்த விவசாயி துரைசாமிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. நோய்த் தாக்குதலின்றி விளையும் பப்பாளி பழங்களை சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட ரெட்லேடி ரக பப்பாளியை வாங்கினால், சந்தைக்குச் செல்வதற்குள்ளாகவே கெட்டு விடும் எனவும், ஜே 15 ரக பப்பாளியை பொறுத்தவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் மற்ற வியாபாரிகளும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விவசாயி துரைசாமிக்கு கிடைத்த பலனின் தொடர்ச்சியாகக் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கவனமும் ஜே 15 பப்பாளி ரகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. தங்களுக்கான வருமானத்தோடு வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொள்ளும் வகையில் காலத்திற்கு ஏற்ப விவசாயத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

Tags: பப்பாளிtoday newsTn newstn agriculture"J15" breaks new ground in papaya cultivation A new dawn for farmer
Share
Tweet
SendShare
Previous Post

விசாரணை வளையத்தில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் : மாணவர்களை ஏமாற்றி ரூ.415 கோடியை சுருட்டியது எப்படி?

Next Post

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies