பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Aug 12, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூமியை கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் கவசமாகக் காந்த புலம் செயல்பட்டு வருகிறது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் காந்தக் கவசம் பலவீனமடைந்து வருவதால், பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டியுள்ளது.

பூமியின் காந்தபுலம் சூரியனின் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்தும், விண்வெளியில் இருந்து விழும் விண்கற்கள், சிறுகோள்கள் போன்றவற்றில் இருந்தும் புவி என்ற கிரகத்தைப் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகிறது.. ஆனால், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையால் காந்த கவசம் வழக்கத்திற்கு மாறாகப் பலவீனமாகியுள்ளது.. இந்த ஒழுங்கின்மை மெல்ல விரிவடைந்து வருவதாகவும், மேற்கு நோக்கி நகர்ந்தும் வருவதையும் நாசா கூறியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பரப்பளவில் கணிசமான அளவுக்கு விரிவடைந்து வருவதை செயற்கைக்கோள் அளவீடுகள் காட்டுகின்றன. இதன் மையப் பள்ளி ஆப்பிரிக்காவில் இருந்து தென் அமெரிக்காவை நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

நாசா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், South Atlantic Anomaly மெதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்ததோடு, காந்தப்புலத்தை பலவீனமாக்கி மேற்கு நோக்கி நகர்வதை உறுதிபடுத்தியுள்ளது. காந்தக் கவசம் ஒரு மென்மையான குமிழியை உருவாக்குவதற்குப் பதிலாக, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சாய்கிறது. இந்தச் சாய்வுதான் காந்த கவசம் தனது வலிமையை மெல்ல இழந்து வருவதைக் குறிக்கும் அறிகுறி.

இது வான்ஆலன் கதிர்வீச்சு பெல்ட்டில் இருந்து வரும் துகள்கள், காந்த கவசத்திற்குள் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. இதன் காரணமாகச் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மைக்குள் நுழைவதை ஆபத்தானதாக மாற்றிவிடும். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு அடியில் ஏற்படும் நீரோட்டங்கள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஒழுங்கின்மையை உருவாக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதனை ஆழமாக அறிந்து கொள்வது, பல நூற்றாண்டுகளாகக் காந்தப்புலம் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

இந்த ஒழுங்கின்மை தரையில் உள்ள மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், உலகளாவிய தொழில்நுட்பத்தை, நுட்பமான வழிகளில் பாதிக்கிறது.

குறிப்பாக ஜிபிஎஸ் துல்லியம், ரேடியோ தகவல்தொடர்புகள், காலநிலை தொடர்பான மாதிரிகள், நிலையான காந்தப்புலத் தரவைப் பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், அது பலவீனப்படுவது தகவல் பரிமாற்றத்தின் துல்லியத்தை குறைத்துவிடும். தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

Tags: பூமிக்கு ஆபத்தா?Earth's magnetic shield is weakening: Is it dangerous for the Earth? Scientists warnபூமியின் காந்த கவசம்
Share
Tweet
SendShare
Previous Post

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

Next Post

இந்தியா-பாக்., போர் நிறுத்தம் – 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies