பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பலவீனமாகும் பூமியின் காந்த கவசம் : பூமிக்கு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூமியை கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாக்கும் கவசமாகக் காந்த புலம் செயல்பட்டு வருகிறது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் காந்தக் கவசம் பலவீனமடைந்து வருவதால், பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டியுள்ளது.

பூமியின் காந்தபுலம் சூரியனின் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்தும், விண்வெளியில் இருந்து விழும் விண்கற்கள், சிறுகோள்கள் போன்றவற்றில் இருந்தும் புவி என்ற கிரகத்தைப் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகிறது.. ஆனால், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையால் காந்த கவசம் வழக்கத்திற்கு மாறாகப் பலவீனமாகியுள்ளது.. இந்த ஒழுங்கின்மை மெல்ல விரிவடைந்து வருவதாகவும், மேற்கு நோக்கி நகர்ந்தும் வருவதையும் நாசா கூறியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பரப்பளவில் கணிசமான அளவுக்கு விரிவடைந்து வருவதை செயற்கைக்கோள் அளவீடுகள் காட்டுகின்றன. இதன் மையப் பள்ளி ஆப்பிரிக்காவில் இருந்து தென் அமெரிக்காவை நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

நாசா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், South Atlantic Anomaly மெதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்ததோடு, காந்தப்புலத்தை பலவீனமாக்கி மேற்கு நோக்கி நகர்வதை உறுதிபடுத்தியுள்ளது. காந்தக் கவசம் ஒரு மென்மையான குமிழியை உருவாக்குவதற்குப் பதிலாக, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சாய்கிறது. இந்தச் சாய்வுதான் காந்த கவசம் தனது வலிமையை மெல்ல இழந்து வருவதைக் குறிக்கும் அறிகுறி.

இது வான்ஆலன் கதிர்வீச்சு பெல்ட்டில் இருந்து வரும் துகள்கள், காந்த கவசத்திற்குள் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. இதன் காரணமாகச் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள், தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மைக்குள் நுழைவதை ஆபத்தானதாக மாற்றிவிடும். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு அடியில் ஏற்படும் நீரோட்டங்கள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஒழுங்கின்மையை உருவாக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதனை ஆழமாக அறிந்து கொள்வது, பல நூற்றாண்டுகளாகக் காந்தப்புலம் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

இந்த ஒழுங்கின்மை தரையில் உள்ள மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், உலகளாவிய தொழில்நுட்பத்தை, நுட்பமான வழிகளில் பாதிக்கிறது.

குறிப்பாக ஜிபிஎஸ் துல்லியம், ரேடியோ தகவல்தொடர்புகள், காலநிலை தொடர்பான மாதிரிகள், நிலையான காந்தப்புலத் தரவைப் பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், அது பலவீனப்படுவது தகவல் பரிமாற்றத்தின் துல்லியத்தை குறைத்துவிடும். தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை, பூமி நிலையானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

Tags: பூமிக்கு ஆபத்தா?Earth's magnetic shield is weakening: Is it dangerous for the Earth? Scientists warnபூமியின் காந்த கவசம்
ShareTweetSendShare
Previous Post

பப்பாளி சாகுபடியில் பட்டையை கிளப்பும் “ஜே 15” : விவசாயிகளுக்கு புதிய விடியல்!

Next Post

இந்தியா-பாக்., போர் நிறுத்தம் – 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies