ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்.
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து பிரதமர் மோடி தென் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து உரையாற்ற உள்ளார். குறிப்பாக நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என்றும், இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பங்கேற்பார் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















