சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? - அதிகாரிகள் மீது புகார்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் நல்வாழ்வுத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் வகையிலும் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை சிறையில் நூல் பேண்டேஜ் மற்றும் அலுவலக கவர்களும், வேலூர் சிறையில் காலணிகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதால் மதுரை சிறையின் அப்போதைய எஸ்.பி ஊர்மிளா மற்றும் தொடர்புடைய அனைவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற ஊழல்களை தடுக்க சிறைத்துறை பிறப்பித்த உத்தரவால் சிறைத் தயாரிப்புப் பொருட்கள் அனைத்தும் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சிறைச் சாலைகள் நேரடியாக அரசுத்துறைகளில் ஆர்டர்கள் பெறக்கூடாது எனவும், டிஜிபி அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பித்து மட்டுமே பொருட்களைப் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறைகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், எந்தப் பொருட்களும் உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு மத்திய சிறைச்சாலைகள் தள்ளப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாது கைதிகளுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நடைபெறக்கூடிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், நடைமுறை என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், தாமதத்தை ஏற்படுத்துவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளில் இருந்தபடி வருவாய் ஈட்டும் வகையில் கைதிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: newsjailtoday newsTn newsA project started for the welfare of prisoners has been frozen? - Complaint against officials
ShareTweetSendShare
Previous Post

ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies