சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? - அதிகாரிகள் மீது புகார்!
Sep 12, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் நல்வாழ்வுத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் வகையிலும் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை சிறையில் நூல் பேண்டேஜ் மற்றும் அலுவலக கவர்களும், வேலூர் சிறையில் காலணிகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதால் மதுரை சிறையின் அப்போதைய எஸ்.பி ஊர்மிளா மற்றும் தொடர்புடைய அனைவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற ஊழல்களை தடுக்க சிறைத்துறை பிறப்பித்த உத்தரவால் சிறைத் தயாரிப்புப் பொருட்கள் அனைத்தும் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சிறைச் சாலைகள் நேரடியாக அரசுத்துறைகளில் ஆர்டர்கள் பெறக்கூடாது எனவும், டிஜிபி அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பித்து மட்டுமே பொருட்களைப் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறைகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், எந்தப் பொருட்களும் உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு மத்திய சிறைச்சாலைகள் தள்ளப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாது கைதிகளுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நடைபெறக்கூடிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், நடைமுறை என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், தாமதத்தை ஏற்படுத்துவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளில் இருந்தபடி வருவாய் ஈட்டும் வகையில் கைதிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: A project started for the welfare of prisoners has been frozen? - Complaint against officialsnewsjailtoday newsTn news
Share
Tweet
SendShare
Previous Post

ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies