சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? - அதிகாரிகள் மீது புகார்!
Jul 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறைக்கைதிகள் நலனுக்கு தொடங்கிய திட்டம் முடக்கம்? – அதிகாரிகள் மீது புகார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க கைதிகளின் நல்வாழ்வுக்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முடக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஊழல் புகார்களில் சிக்கிய அதிகாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதோடு கைதிகளின் நல்வாழ்வுத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் வகையிலும் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை சிறையில் நூல் பேண்டேஜ் மற்றும் அலுவலக கவர்களும், வேலூர் சிறையில் காலணிகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதால் மதுரை சிறையின் அப்போதைய எஸ்.பி ஊர்மிளா மற்றும் தொடர்புடைய அனைவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது போன்ற ஊழல்களை தடுக்க சிறைத்துறை பிறப்பித்த உத்தரவால் சிறைத் தயாரிப்புப் பொருட்கள் அனைத்தும் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சிறைச் சாலைகள் நேரடியாக அரசுத்துறைகளில் ஆர்டர்கள் பெறக்கூடாது எனவும், டிஜிபி அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பித்து மட்டுமே பொருட்களைப் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறைகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், எந்தப் பொருட்களும் உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு மத்திய சிறைச்சாலைகள் தள்ளப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதன் மூலம் அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாது கைதிகளுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நடைபெறக்கூடிய ஊழல்கள் தடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், நடைமுறை என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், தாமதத்தை ஏற்படுத்துவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளில் இருந்தபடி வருவாய் ஈட்டும் வகையில் கைதிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: A project started for the welfare of prisoners has been frozen? - Complaint against officialsnewsjailtoday newsTn news
ShareTweetSendShare
Previous Post

ஆபத்தான கட்டிடத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளை கல்வி பயில அனுப்புவீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies