அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்தும் ஆர்மீனியா : இந்தியாவின் Su-30MKI விமானங்களை வாங்க ஆர்வம்!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்தும் ஆர்மீனியா : இந்தியாவின் Su-30MKI விமானங்களை வாங்க ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்கி அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்த, ஆர்மீனியா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் JF-17 விமானங்களை வாங்கி அஜர்பைஜான் போக்கு காட்டிய நிலையில், இந்தியாவுடன் ராணுவ தளவாட பேச்சுவார்த்தை நடத்தி ஆர்மீனியா அதிரடி காட்டியிருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்தியா – பாகிஸ்தானை போன்றே ஆர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். சோவியத் யூனியன் உடைந்தபோது அஜர்பைஜானும், ஆர்மீனியாவும் தனித்தனி குடியரசு நாடுகளாக உருவாகின. ஆனால் சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தபோதே அஜர்பைஜானும் – ஆர்மீனியாவும் மோதிக்கொண்டு தான் இருந்தன.

அந்த மோதலுக்குக் காரணம், இரு நாடுகளையும் பிரிக்கும் நார்கோனா – காராபாத் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தான். இதனால் இருநாடுகளுக்கும் இடையே 1988 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் கடுமையான போர் நடைபெற்றன. ஆர்மீனியாவில் கிறிஸ்தவர்களும், அஜர்பைஜானில் இஸ்லாமியர்களும் அதிகளவில் வாழ்ந்து வருவதும் மோதலுக்கு ஓர் முக்கிய காரணம்.

அஜர்பைஜானில் எண்ணெய் வளமும், ஆர்மீனியாவில் தங்களது ராணுவ தளமும் உள்ளதால், இருதரப்பிடமுமே ரஷ்யா நட்புப் பாராட்டு வருகிறது. இருநாடுகளின் தேவையும் முக்கியம் என்பதால், மோதலில் என்ன செய்வதென்று புரியாமல் ரஷ்யா விழிபிதுங்கி நிற்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அதீத போர் திறன் கொண்ட விமானங்களில் ஒன்றான சுகோய் 30 MKI-ஐ வாங்க ஆர்மீனியா ஆர்வம் காட்டியிருக்கிறது.

காரணம், எதிரி நாடான அஜர்பைஜான், பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களை வாங்கியிருப்பதே. மொத்தம் 40 JF-17 போர் விமானங்களை அஜர்பைஜான் வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த ஆர்மீனியா இந்தியாவின் போர் குதிரையான சுகோய் 30 MKIயின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது.

இதற்காக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஆர்மீனியா ராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தளவாடங்கள் கொள்முதல் செய்த வரலாறு பிறக்கும் எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக ரஷ்யாவின் துணை கைவிட்டு போவதாக நினைக்கும் ஆர்மீனியா, இந்தியாவின் உதவியை நாட தொடங்கியிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் பினாகா ராக்கெட், ஸ்வாதி ரேடார்களை வாங்கி குவிக்கும் ஆர்மீனியா, தற்போது சுகோய் 30 MKI போர் விமானங்களையும் வாங்க முனைப்பு காட்டியுள்ளது.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சுகோய் போர் விமானங்கள் வரும் 2027-ம் ஆண்டு முதல் ஆர்மீனியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு முதல் Astra Mk-2 and Mk-3 போன்ற அதிக எடை கொண்ட ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் வகையில், சுகோய் ரக விமானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் பல நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் போடும் என்றே பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Tags: Indiaindian armyINDIAN AIRFOCEArmenia is interested in buying India's Su-30MKI aircraftcausing trouble for AzerbaijanSu-30MKI
ShareTweetSendShare
Previous Post

போலி ORS பானங்கள் மீது பாயும் நடவடிக்கை – எச்சரிக்கும் மத்திய அரசு!

Next Post

தேஜஸ் இலகு ரக விமான விபத்திற்கு காரணம் என்ன? – விசாரணை குழு அமைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies