கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - மத்திய அரசு விளக்கம்!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – மத்திய அரசு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மை செயலருக்கு, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த 2024ஆம் ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் இடையே 50 சதவீதம் வீதம் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் கடிதம் அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது என்றும்,
நகர்ப்புற வழித்தடத்தில் இயக்கப்படும் சராசரி வேகம், மெட்ரோ வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

வழித்தடத்துக்கான சாலை வசதி 22 மீட்டர் அகலத்துக்கு இருக்க வேண்டும் என்றும்,
22 மீட்டர் அகலம் சாலை இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ செல்லும் வழித்தடங்களில் உள்ள கட்டட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலத்தை பெறுவதற்கு அதிக பொருட்செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகையின்படி தற்போது மக்கள் தொகை எவ்வளவு, கோவைக்கு எந்தெந்த நகரங்களில் இருந்து வந்து செல்கின்றனர், எந்தெந்த வகைகளில் மெட்ரோ ரயில் அவசியம் என்ற கூடுதல் அறிக்கையை இணைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் செல்வர் என கணித்திருப்பது அதிகபட்சமாக இருக்கிறது என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் கார்களில் பயணிப்பவர்கள், மெட்ரோவுக்கு மாறுவரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணியர் செல்வர் என்றால், அந்த வழித்தடத்தில் இதர வாகனங்கள் அனுமதிக்கப்படாதா என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: central governmentCoimbatore Metro Rail Project Report.Government of Tamil Nadu.
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர்  தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Next Post

பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினம் – ஜெகதீப் தன்கர்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies