திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கத்தினர் லட்சக்கணக்கில் மதிப்புடைய திருக்குடைகளை கடந்த 21 ஆண்டுகளாக காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி, நான்கு லட்சம் மதிப்புடைய 15 திருக்குடைகளை ஆன்மிக சேவா சங்கத்தினர் அண்ணாமலையார் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஆன்மிக சேவா சங்கத்தினர், கடந்த 21 ஆண்டுகளாக இந்த திருச்சேவையை அண்ணாமலையார் கோயிலுக்கு செய்து வருகின்றனர். கைலாய வாத்தியம் முழங்க மாட வீதியில் உலா வந்து அண்ணாமலையார் கோயிலில் 15 திருக்குடைகளும் ஒப்படைக்கப்பட்டன.
















