பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!
Jan 14, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் அணுசக்தி நாயகனாக அறியப்பட்ட அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்ட விவரங்களை வெளிநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

பாகிஸ்தானில் தனது இறுதி மூச்சு வரை ஹீரோவாக வலம் வந்த அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்டங்களில் கைத்தேர்ந்தவராக இருந்தவர். 2021-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வரை, அவர் போற்றப்பட்டு வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின்னர், அவர் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தவர் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது.

அதில் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியது என்னவென்றால், கள்ளச்சந்தையில் அணுசக்தி ரகசியங்களை அப்துல் காதீர் கான் கசியவட்டது தான். ஈரான், வடகொரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கும், சில தீய சக்திகளுக்கும் அணுசக்தி நுட்பங்களை ஏ.கே. கான் விற்பனைசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டட நிலையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜேம்ஸ் லாயர் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அணு ஆயுத விற்பனையை தடுப்பதற்காக சிஐஏ நியமித்த உளவு குழுவில் இடம்பெற்றிருந்த ஜேம்ஸ் லாயர், ஆரம்பத்தில் ஐரோப்பிய பகுதிகளில் உளவு வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர், அப்துல் காதீர் கானின் சட்டவிரோத செயல்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் லாயர், தற்போது பல்வேறு உண்மைகளை உலகிற்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

அப்துல் காதீர் கானை மரண வியாபாரிஎனக் குறிப்பிடும் ஜேம்ஸ் லாயர், ரகசியமாக அணுசக்தி நுட்பங்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதிகளுக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் பணம் பகிரப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில், அப்துல் காதீர் கானின் குற்றச்செயலை கண்டறியதடுமாறியதாகக் குறிப்பிட்டுள்ளள ஜேம்ஸ் லாயர், லிபியாவுக்கு அணுசக்தி திட்டங்களை பகிர்ந்த விவகாரத்தில் ஏ.கே.கான் அப்பட்டமாக மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க உளவு குழுவினர், BBC CHINA சரக்கு கப்பலில் சல்லடைபோட்டுத் தேடிய போது, அணுஆயுத உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் இருந்ததை கண்டறிந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அப்துல் காதீர் கான் பின்னணியில் இருப்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் கவனத்திற்கு, இந்த விவகாரத்தை கொண்டு சென்ற போது, அப்துல் காதீர் கான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதையும் ஜேம்ஸ் லாயர் நினைவுகூர்ந்துள்ளார்.

தனது அரசுக்கு துரோகம் செய்த ஏ.கே.கானை கொலை செய்யும் அளவுக்கு பர்வேஸ் முஸாரப் ஆத்திரத்தில் இருந்ததாகவும் ஜேம்ஸ் லாயர் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் உடைய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்த அப்துல் கதீர் கானின் சட்டவிரோத காரியங்கள், அண்மை காலமாக வெட்ட வெளிச்சமாகி வருவதால், பாகிஸ்தான் மக்களுக்கு வில்லனாக தெரிய தொடங்கியிருக்கிறார் அணுசக்தி நாயகன்.

Tags: pakistanThe secret work of Pakistan's nuclear hero: A former American intelligence officer who has been arrestedபாகிஸ்தான் அணுசக்திஅமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி
ShareTweetSendShare
Previous Post

பல்லாவரம் தொகுதியில் பலருக்கும் எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவில்லை – பொதுமக்கள் புகார்!

Next Post

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies