தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
Apr 29, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்பனை எடுத்துச் செல்லப்படுகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தைக்குத் தலைவாசல் மட்டுமின்றி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆறகளூர் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். எப்படி பார்த்தாலும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தினந்தோறும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையின் அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

ஒட்டுமொத்தமாக நான்கு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டும், பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும் மழை காலம் ஆரம்பித்து விட்டால் போதும்…. மொத்த மார்க்கெட்டுமே சேறும் சகதியுமான மாறி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், விற்பனைக்கு வரும் வியாபாரிகளும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதும், இருசக்கர வாகனங்களில் தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதையாக இருக்கிறது. காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் தலையாய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விற்பனைக்கான சூழ்நிலையை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: tn rain newsவடியாத மழைநீர்floodflood newsRainwater that does not drain into the daily market: Traders in tearsகண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

Next Post

நீதி என்பது அனைவருக்குமானதாக மாற வேண்டும் – ஆளுநர் ரவி

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies