தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
Jul 29, 2026, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்பனை எடுத்துச் செல்லப்படுகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தைக்குத் தலைவாசல் மட்டுமின்றி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆறகளூர் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். எப்படி பார்த்தாலும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தினந்தோறும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையின் அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

ஒட்டுமொத்தமாக நான்கு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டும், பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும் மழை காலம் ஆரம்பித்து விட்டால் போதும்…. மொத்த மார்க்கெட்டுமே சேறும் சகதியுமான மாறி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், விற்பனைக்கு வரும் வியாபாரிகளும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதும், இருசக்கர வாகனங்களில் தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதையாக இருக்கிறது. காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் தலையாய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விற்பனைக்கான சூழ்நிலையை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: tn rain newsவடியாத மழைநீர்floodflood newsRainwater that does not drain into the daily market: Traders in tearsகண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

Next Post

நீதி என்பது அனைவருக்குமானதாக மாற வேண்டும் – ஆளுநர் ரவி

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies