காற்று மாசு போராட்டத்தில் நக்சல் ஆதரவு முழக்கம் : அத்துமீறிய மாணவர்கள் கைது!
Mar 15, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காற்று மாசு போராட்டத்தில் நக்சல் ஆதரவு முழக்கம் : அத்துமீறிய மாணவர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் மோசமான காற்று மாசுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நக்சலைட் மத்வி ஹித்மாவின் புகைப்பட போஸ்டர்களுடன் முழக்கங்களை எழுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர்கள் மீதும் பெப்பர் ஸ்பிரே தூவி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுக்கு எதிராக அரசைக் கண்டித்து இந்தியா கேட்டின் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா கேட் பகுதி எப்போதும் பிரிவு 163-ன் கீழ் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் எந்தவொரு போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா கேட் அருகில் அனுமதியின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலைந்து போகச் சொன்ன காவல்துறையினர் மீதும், தூய்மை பணியாளர்கள் மீதும் பெப்பர் ஸ்ப்ரே தூவி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சில காவல்துறையினர் உட்பட தூய்மை பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

டெல்லி காவல்துறையினர் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இது தொடர்பாக இரண்டு FIRகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். போராட்டம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், போராட்டக்காரர்களின் நிஜமுகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம், மாவோயிஸ்டுக்கு ஆதரவான போராட்டம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 18ம் தேதி, ஆந்திரப் பிரதேச காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மாவின் ஓவியம் வரைந்த போஸ்டரை போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாணவர் ஏந்தியுள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதியை புகழ்ந்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பழங்குடியினத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஹித்மா , தனது உரிமைப் போருக்காக ஆயுதங்களை எடுத்தார் என்றும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏற்க முடியாது என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாணவர் கூறியுள்ளார்.

உதடுகளில் சிவப்பு வணக்க வாசகங்களுடன் சமூக ஆர்வலர்களாகக் காட்டிக் கொள்ளும் ஜிஹாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் புதிய முகம் தான் டெல்லி போராட்டக்காரர்கள் என்று டெல்லி மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டை விட, மார்க்ஸ் மற்றும் மாவோவின் மாசுபாடு இடதுசாரி கொள்கையுடைய மாணவர்களின் மூளையில் அடர்த்தியாக உள்ளது என்றும், தீவிரவாதிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் கனவு காண்பதாகவும் அது மிகவும் ஆபத்தானது என்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீது 36 கொடூரத் தாக்குதல்களை நடத்திய ஒரு மாவோயிஸ்ட்டை இந்தியா கேட்டில் நின்றபடி புகழ்ந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: proteststudent protestdelhi air pollutionPro-Naxal slogans during air pollution protest: Students arrested for violating the law
ShareTweetSendShare
Previous Post

கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

பூமியை தாக்கிய சூரியப் புயல் : விஞ்ஞானிகள் கண்டறிய தவறியது எப்படி?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies