பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!
Mar 15, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு கிட்டதட்ட 2 வாரங்கள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியானபடியே உள்ளன. அதில் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும்படியாக உள்ளன. இந்தச் சூழலில், டெல்லி தாக்குலை நடத்திய உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகளின் சித்தாந்தம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அடிப்படையில் உமர் நபி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவராக இருந்துள்ளார். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளவிலான இஸ்லாமிய அரசை அமைப்பதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலக்கு. மேலும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி, அன்சார் கஸ்வாதுல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகிர் மூஸா ஆகியோரை உமர் நபி முன்மாதிரியாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவரின் கூட்டாளிகள் பலர் அல்கொய்தாவின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர்.

குறிப்பாக, காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த முஸமில் ஷகீல் கனாய், அனந்த்நாக் பகுதியை சேர்ந்த அடீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்டோர் அல்கொய்தா அமைப்பின் சித்தாந்தத்தின்படி இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், உமர் நபி தனது கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, காஷ்மீரில் நடைபெற்ற அடீல் அகமது ராதரின் திருமணத்தில்கூட உமர் நபி பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் காஷ்மீரில் மதகுருவான Mufti Irfan Waga கைது செய்யப்பட்டார். உடனடியாக, உமர் நபி கடந்த மாதம் 18ம் தேதி காஷ்மீர் கிளம்பி சென்று, தனது கூட்டாளிகளை சந்தித்துள்ளார். அப்போது, அவர்களிடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

காஷ்மீரில் இருந்த உமரின் கூட்டாளிகள் தங்களை அன்சார் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பை சேர்ந்தவர்களாக அழைத்துகொண்டனர். இந்த அமைப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதப்படுகிறது. காஷ்மீரில் உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகள் இடையே சந்திப்பு நடந்த 3 வாரத்தில்தான் டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அறையின் சாவியை, உமர் நபியும், முஸமில் ஷகீல் கனாயும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் இருந்த ரசாயனங்களை கொண்டு உமர் நபி சோதனைகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Ideological clash between terrorists: New information released in the Delhi incidentnewsDelhi PoliceTodaytoday newsdelhi car blast
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டம் : என்ன செய்ய போகிறார் ஜெலன்ஸ்கி?

Next Post

பாலிவுட் ஹீமென் “தர்மேந்திரா” – அன்றும் இன்றும் என்றும் ஹீரோ…!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies