பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!
Sep 12, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு கிட்டதட்ட 2 வாரங்கள் கடந்துவிட்டன. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியானபடியே உள்ளன. அதில் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும்படியாக உள்ளன. இந்தச் சூழலில், டெல்லி தாக்குலை நடத்திய உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகளின் சித்தாந்தம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அடிப்படையில் உமர் நபி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவராக இருந்துள்ளார். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய உலகளவிலான இஸ்லாமிய அரசை அமைப்பதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலக்கு. மேலும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி, அன்சார் கஸ்வாதுல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகிர் மூஸா ஆகியோரை உமர் நபி முன்மாதிரியாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவரின் கூட்டாளிகள் பலர் அல்கொய்தாவின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர்.

குறிப்பாக, காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த முஸமில் ஷகீல் கனாய், அனந்த்நாக் பகுதியை சேர்ந்த அடீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்டோர் அல்கொய்தா அமைப்பின் சித்தாந்தத்தின்படி இயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், உமர் நபி தனது கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, காஷ்மீரில் நடைபெற்ற அடீல் அகமது ராதரின் திருமணத்தில்கூட உமர் நபி பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் காஷ்மீரில் மதகுருவான Mufti Irfan Waga கைது செய்யப்பட்டார். உடனடியாக, உமர் நபி கடந்த மாதம் 18ம் தேதி காஷ்மீர் கிளம்பி சென்று, தனது கூட்டாளிகளை சந்தித்துள்ளார். அப்போது, அவர்களிடையே சமரசம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

காஷ்மீரில் இருந்த உமரின் கூட்டாளிகள் தங்களை அன்சார் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பை சேர்ந்தவர்களாக அழைத்துகொண்டனர். இந்த அமைப்பு அல் கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதப்படுகிறது. காஷ்மீரில் உமர் நபி மற்றும் அவரது கூட்டாளிகள் இடையே சந்திப்பு நடந்த 3 வாரத்தில்தான் டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட அறையின் சாவியை, உமர் நபியும், முஸமில் ஷகீல் கனாயும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தில் இருந்த ரசாயனங்களை கொண்டு உமர் நபி சோதனைகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Ideological clash between terrorists: New information released in the Delhi incidentnewsDelhi PoliceTodaytoday newsdelhi car blast
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டம் : என்ன செய்ய போகிறார் ஜெலன்ஸ்கி?

Next Post

பாலிவுட் ஹீமென் “தர்மேந்திரா” – அன்றும் இன்றும் என்றும் ஹீரோ…!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies