திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்த விசாரணையில், இந்த விவாகரத்தை சமூக நல்லிணக்கம் பேணும் வகையில் பார்க்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது தங்கள் கையில் தான் உள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கில் வக்பு வாரியத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என தர்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழக வக்பு போர்டு உறுப்பினர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், அவரவர் தங்கள் தரப்பு பதிலைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
















