கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்த 24 வயது இந்திய வம்சாவளி இளைஞர், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியான நிக்கோலஸ் சிங் என்பவரும் உள்ளார்.
இவர் மீது ஆயுத கொள்ளை, தடை உத்தரவுக்கு முரணாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருந்தன.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்தாண்டு மே 31ஆம் தேதி தலைமறைவானார்.
பரோல் விதிமுறைகளை மீறியதற்காக அவரைக் கைது செய்யக் கனடா முழுவதும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 21 ம் தேதி இரவு டொராண்டோவில் உள்ள பாத்தர்ஸ்ட், டுபோன்ட் தெருக்களுக்கு அருகே, நிக்கோலஸ் சிங், வாகனத்தில் சுற்றிவருவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் நிக்கோலஸ் சிங்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் சிங்கிடம், துப்பாக்கி, துப்பாக்கி உறை மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
















