தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்பனை எடுத்துச் செல்லப்படுகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தைக்குத் தலைவாசல் மட்டுமின்றி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆறகளூர் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். எப்படி பார்த்தாலும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தினந்தோறும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையின் அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.

ஒட்டுமொத்தமாக நான்கு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டும், பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும் மழை காலம் ஆரம்பித்து விட்டால் போதும்…. மொத்த மார்க்கெட்டுமே சேறும் சகதியுமான மாறி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், விற்பனைக்கு வரும் வியாபாரிகளும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதும், இருசக்கர வாகனங்களில் தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதையாக இருக்கிறது. காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் தலையாய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விற்பனைக்கான சூழ்நிலையை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: Rainwater that does not drain into the daily market: Traders in tearsகண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!tn rain newsவடியாத மழைநீர்floodflood news
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

Next Post

நீதி என்பது அனைவருக்குமானதாக மாற வேண்டும் – ஆளுநர் ரவி

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies