HAMMER ஏவுகணைகள் தயாரிக்கும் இந்தியா - பிரான்ஸ் - மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

HAMMER ஏவுகணைகள் தயாரிக்கும் இந்தியா – பிரான்ஸ் – மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும் பிரான்சும் இணைந்து HAMMER ரக ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்தக் கூட்டு முன்னெடுப்பு மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

பாஜக அரசு கொண்டு வந்த மேக் இன் இந்தியா திட்டம், பாதுகாப்புத்துறை தற்சார்பு நிலையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி, ராணுவ பலம் வாய்ந்த நாடுகளுடன், ஒப்பந்தம் மேற்கொள்ளும் மத்திய அரசு, உள்நாட்டிலேயே தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒருபகுதியாகப் பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து HAMMER ரக ஏவுகணைகளை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாக தாக்கி அழிப்பதற்கு HAMMER ஏவுகணைகள் உதவியதால் இருநாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி, இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், பிரான்ஸின் Safran Electronics and Defence நிறுவனமும் இணைந்து HAMMER ஏவுகணைகளை தயாரிக்க உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்தியா HAMMER ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டியது.

அங்குத் தொடங்கிய பயணம், இருநாடுகளும் சேர்ந்து ஏவுகணைகளை தயாரிக்கும் அளவுக்கு இன்று வளர்ந்திருக்கிறது. பிரான்ஸ் கண்டுபிடிப்பில் உருவான HAMMER ஏவுகணைகள், போர் விமானங்களில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்தது.

125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ, 1000 ஆயிரம் கிலோ என நான்கு VARIANT-களில் உருவாக்கப்பட்டிருக்கும் HAMMER ரக ஏவுகணைகள், எடைக்கு ஏற்றார் போல், இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நகரக்கூடிய இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறன் இருப்பதால், 99 சதவீதம் வச்ச குறி தப்பாது எனத் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

2008-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்ட ஹாமர் ஏவுகணைகள், தற்போது உக்ரைனுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைகிறது.

நடப்பாண்டின் தொடக்கத்தில் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 26 ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் இருநாடுகளின் ராணுவ உறவு வலுப்பட்டுள்ளது என்பதையே வெளிக்காட்டுகிறது.

Tags: India-France to produce HAMMER missiles - a major milestone in the Make in India projectHAMMER ஏவுகணைIndiaindian armyமேக் இன் இந்தியாஇந்தியா - பிரான்ஸ்
ShareTweetSendShare
Previous Post

வைகுண்ட ஏகாதசி – 3 நாட்களுக்கான டிக்கெட் நாளை வெளியீடு!

Next Post

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies