திருச்செந்தூர் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கனமழையால் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரை அருகே உள்ள ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வெற்றிலை தோட்டத்தில் மழைநீர் புகுந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு புவிசார் குறியீடு பெற்ற வெற்றிலை அழுகும் நிலையில் உள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்காததால் மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வார வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















