மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!
Mar 15, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் ஏற்றுவதே கார்த்திகை மாதத்தின் சிறப்பு. தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களோ அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் காத்திருக்கின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

டிசம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பது வழக்கம்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாய்க்கன்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் அகல் விளக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஆர்டர்களின் பேரில் அனுப்பப்படுகின்றன. 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், ஒரு முகம், ஐந்து முகம் விளக்கு எனப் பல்வேறு வகையான அகல் விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. அந்தந்த விளக்குகளின் அளவுக்கு ஏற்ப விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால் பண்டிகை காலங்களில் இந்த விலை கட்டுப்படியாகவில்லை எனவும், இதனால் இழப்புதான் ஏற்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வட மாநிலத்தவர்கள் பிளாஸ்டர் பாரிஸ் போன்ற பொருட்களில் பல்வேறு வடிவங்களில் டிசைன் விளக்குகள் தயாரித்து விற்பதோடு, மண் விளக்குகளின் விலைக்கே தருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் களிமண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

நலவாரியத்தில் பதிவு செய்த 11,500 பேரில் 7000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதாகவும். மீதமுள்ளவர்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி தமிழக அரசு நிவாரணம் வழங்காமல் இருப்பதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. தங்கள் வாழ்வாதாரம் செழிக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: மழைக்கால நிவாரணம்DMKTn newsWhen will the monsoon relief arrive? : Pottery workers waitingகாத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

HAMMER ஏவுகணைகள் தயாரிக்கும் இந்தியா – பிரான்ஸ் – மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்!

Next Post

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies