மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்டவற்றில் விளக்குகள் வைத்திருந்தாலும் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் ஏற்றுவதே கார்த்திகை மாதத்தின் சிறப்பு. தீபத் திருவிழா நெருங்கும் வேளையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களோ அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் காத்திருக்கின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

டிசம்பர் 3ம் தேதி நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிப்பது வழக்கம்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாய்க்கன்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் அகல் விளக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஆர்டர்களின் பேரில் அனுப்பப்படுகின்றன. 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், ஒரு முகம், ஐந்து முகம் விளக்கு எனப் பல்வேறு வகையான அகல் விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. அந்தந்த விளக்குகளின் அளவுக்கு ஏற்ப விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால் பண்டிகை காலங்களில் இந்த விலை கட்டுப்படியாகவில்லை எனவும், இதனால் இழப்புதான் ஏற்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வட மாநிலத்தவர்கள் பிளாஸ்டர் பாரிஸ் போன்ற பொருட்களில் பல்வேறு வடிவங்களில் டிசைன் விளக்குகள் தயாரித்து விற்பதோடு, மண் விளக்குகளின் விலைக்கே தருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் களிமண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

நலவாரியத்தில் பதிவு செய்த 11,500 பேரில் 7000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டதாகவும். மீதமுள்ளவர்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி தமிழக அரசு நிவாரணம் வழங்காமல் இருப்பதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. தங்கள் வாழ்வாதாரம் செழிக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: When will the monsoon relief arrive? : Pottery workers waitingகாத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்மழைக்கால நிவாரணம்DMKTn news
ShareTweetSendShare
Previous Post

HAMMER ஏவுகணைகள் தயாரிக்கும் இந்தியா – பிரான்ஸ் – மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்!

Next Post

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies