மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!
Apr 30, 2026, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு திமுகவினர் அழுத்தம் கொடுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பகுதியில் பாய்ந்தோடும் பாலாற்றில் மணல்குவாரி அமைக்கக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணல் கோரி அமைப்பதற்கு அனுமதி கேட்டு, திமுக அமைச்சர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே மணல் குவாரி அமைக்கும் வகையில் பாலாற்றில் வாகனங்கள் சென்று வரக்கூடிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணலை குவித்து வைத்து ஏற்றுமதி செய்யும் ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பாலாற்று படுகை களிமண்ணாக மாறி வரும் நிலையில், மேலும் மேலும் குவாரி அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலன், நிலத்தடி நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் அரசு மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

தமிழக அரசு தங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெய்து வரும் மழை காரணமாகப் பாலாற்றில் மணல் சேர்ந்திருக்கும் நிலையில், மணல் குவாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றால், சுற்றுசூழல் நிலை என்ன ஆகும் என்பதே அனைவரின் ஐயமாக உள்ளது.

Tags: மக்கள் கொதிப்புnewsTn newsAttempt to set up a sand quarry: People are angry over DMK's actionsமணல் குவாரி அமைக்க முயற்சி
ShareTweetSendShare
Previous Post

மழைக்கால நிவாரணம் எப்போது வரும்? : காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Next Post

எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies