எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் - அச்சத்தில் அலறும் மக்கள்!
Jul 29, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊருக்கே மின்சாரம் வழங்க வந்தவர்கள் தங்களுக்கு மின்சாரம் இல்லாமல் 40 வருடங்களாகத் தவித்து வருகின்றனர். எங்கே அரங்கேறியுள்ளது இந்தத் துயரம். பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

நீலகிரி மாவட்டம் உதகை மலை அடிவாரத்தில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மசினகுடி என்ற கிராமத்தில் லேபர் கேம்ப் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பின்னணிதான் கேட்டாலே அதிர வைக்கிறது. சிங்காரா நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த முறையில் சிலர் அழைத்து வரப்பட்டனர்.

மசினகுடி லேபர் கேம்ப் பகுதியில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அவற்றில் தங்கி பணி புரிந்தனர். நீர் மின் நிலையப் பணிகள் முடிந்தவுடன் வேறு எங்குச் செல்வது எனத் தெரியாமல் தற்காலிககுடியிருப்பிலேயே வசிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒன்றல்ல.. இரண்டல்ல… மூன்று தலைமுறைகளாக லேபர் கேம்ப் பகுதியிலேயே வாழ்ந்து வரும் 35 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கடந்த 40 வருடங்களாக மின்சார வசதியின்றி தவிக்கின்றனர்.

நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வந்த தங்களுக்கு இனி இந்தப் பகுதி தான் சொந்த கிராமம் என நினைத்து ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் இதே முகவரியில் பெற்றுக்கொண்டனர். ஆனால் மின்சாரம் இல்லாததோடு பாதுகாப்பற்ற தகரத்தினால் ஆன குடியிருப்புகளில் வசித்துக் கொண்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

குடியிருப்புகளை சுற்றி வனப்பகுதி உள்ளதால் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கிறது. இரவு நேரத்தில் தெரு விளக்கு அடியிலும், மொபைல் ஃபோன் டார்ச் வெளிச்சத்திலும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலையும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களில் மண்ணெணெய் கூடக் கிடைக்காமல் வனப்பகுதியில் இருளில் உயிர் பயத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரிடமும் வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

அங்குள் நீலகிரி மாவட்டத்தில் மின்சாரம் கிடைக்க நீர்மின் நிலையப் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவது கொடுமையிலும் கொடுமை. கடைக்கோடி குக்கிராமங்களுக்கு சாலை வசதி, வீடு வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

Tags: When will electricity be available? : 40 years of darkness - people screaming in fearஅச்சத்தில் அலறும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Next Post

வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா – நிதானம் காட்டும் இந்தியா!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies