எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் - அச்சத்தில் அலறும் மக்கள்!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது கிடைக்கும் மின்சாரம்? : 40 வருடங்களாக இருள் – அச்சத்தில் அலறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊருக்கே மின்சாரம் வழங்க வந்தவர்கள் தங்களுக்கு மின்சாரம் இல்லாமல் 40 வருடங்களாகத் தவித்து வருகின்றனர். எங்கே அரங்கேறியுள்ளது இந்தத் துயரம். பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

நீலகிரி மாவட்டம் உதகை மலை அடிவாரத்தில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மசினகுடி என்ற கிராமத்தில் லேபர் கேம்ப் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பின்னணிதான் கேட்டாலே அதிர வைக்கிறது. சிங்காரா நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த முறையில் சிலர் அழைத்து வரப்பட்டனர்.

மசினகுடி லேபர் கேம்ப் பகுதியில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அவற்றில் தங்கி பணி புரிந்தனர். நீர் மின் நிலையப் பணிகள் முடிந்தவுடன் வேறு எங்குச் செல்வது எனத் தெரியாமல் தற்காலிககுடியிருப்பிலேயே வசிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒன்றல்ல.. இரண்டல்ல… மூன்று தலைமுறைகளாக லேபர் கேம்ப் பகுதியிலேயே வாழ்ந்து வரும் 35 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கடந்த 40 வருடங்களாக மின்சார வசதியின்றி தவிக்கின்றனர்.

நீர் மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வந்த தங்களுக்கு இனி இந்தப் பகுதி தான் சொந்த கிராமம் என நினைத்து ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் இதே முகவரியில் பெற்றுக்கொண்டனர். ஆனால் மின்சாரம் இல்லாததோடு பாதுகாப்பற்ற தகரத்தினால் ஆன குடியிருப்புகளில் வசித்துக் கொண்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

குடியிருப்புகளை சுற்றி வனப்பகுதி உள்ளதால் வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கிறது. இரவு நேரத்தில் தெரு விளக்கு அடியிலும், மொபைல் ஃபோன் டார்ச் வெளிச்சத்திலும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலும் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலையும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களில் மண்ணெணெய் கூடக் கிடைக்காமல் வனப்பகுதியில் இருளில் உயிர் பயத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரிடமும் வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

அங்குள் நீலகிரி மாவட்டத்தில் மின்சாரம் கிடைக்க நீர்மின் நிலையப் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவது கொடுமையிலும் கொடுமை. கடைக்கோடி குக்கிராமங்களுக்கு சாலை வசதி, வீடு வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருவதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

Tags: When will electricity be available? : 40 years of darkness - people screaming in fearஅச்சத்தில் அலறும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

Next Post

வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா – நிதானம் காட்டும் இந்தியா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies