கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சாட்சியை மிரட்டிய வழக்கில் இருந்து சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை விடுவித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இவ்வழக்கில் தனியார் விடுதி உரிமையாளரும், சாட்சியாளருமான சாந்தியை மிரட்டியதாகச் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் உதகை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி சோழியா உத்தரவிட்டார்.
















