அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் அதிகளவு ஆக்சிஜனை வெளியேற்றும் பகுதி என்ற பெருமை பெற்றிருந்த அமேசான் காடுகள், தற்போது அதிகளவில் கார்பனை வெளியேற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

காற்று மாசு, உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மூல காரணமாக விளங்குவது கார்பன் டை ஆக்சைடு. வாகனங்களின் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் புகையாலும், நகர்மயமாதலாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

காடுகளை காப்பது அந்தத் திட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. இந்தப் பின்னணியில்தான் அமேசான் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் காடுகளில் சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளதால், பெரும் அளவில் கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு மரம் ஒரு ஆண்டுக்குச் சராசரியாக 25 கிலோ கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், அமேசான் காடுகளில் உள்ள 390 பில்லியன் மரங்களும் சேர்ந்து எத்தனை லட்சம் டன் கரியமில வாயுக்களை உறிஞ்சும் என்பதை நாமே யூகித்து கொள்ளலாம். மேலும், இந்தக் காடுகள் நாள்தோறும் 20 பில்லியன் டன் நீராவியை வெளியேற்றுவதால், நீர் சுழற்சியும், வளி மண்டலத்தின் தூய்மையும் பேணப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் உலக வெப்பமயமாதலை தடுக்கும் இயற்கை அரணாக அமேசான் காடுகள் விளங்கி வந்தன. ஆனால், அந்த நிலைமை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. அமேசான் காடுகள் ஆக்சிஜனை வெளியிடுவதற்கு பதிலாக, அதிகளவில் கார்பனை வெளியிட்டு வருவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை, லெய்செஸ்டர், ஷெஃபீல்ட் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். 2017ம் ஆண்டு வரை நிலைமை சீராக இருந்ததாகவும், அதன் பிறகுதான் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழல் நீடித்தால், உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரிக்க தொடங்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மரங்கள் வெட்டப்படுதல், அதிகளவில் சுரங்கங்களை தோண்டுதல், உள்ளிட்டவை அமேசான் காடுகளின் தன்மை மாறுபட்டதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தேவையான நடவடிக்கைகளைத் தற்போதே எடுக்கத் தவறினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை 2.8 டிகிரி செல்கியஸ் முதல் 3.1 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2021ம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான உலகளவிலான மாநாடு ஸ்காட்லாந்தில் நடைபெற்றது.

அப்போது, 2030ம் ஆண்டுக்குள் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், திட்டத்தை செயல்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சூழலில் இந்தாண்டிற்கான காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. அப்போது, உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டல மழை காடுகளை காக்க 125 பில்லியன் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும்பாலான நாடுகள் அந்தத் திட்டத்திற்கும் நிதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இப்படி, உலக நாடுகளின் அலட்சியத்தால்தான் அமேசான் போன்ற காடுகள் பாதிப்பை சந்தித்து வருவதாக, வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கோடிக்கணக்கில் மரங்களை நட்டு புதிதாகக் காடுகளை உருவாக்கும் காட்டிலும், தற்போதுள்ள காடுகளை பேணி காப்பது மிகவும் அவசியம் என்பதையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

Tags: உலக வெப்பமயமாதல்NEWS TODAYtoday newsகாற்று மாசுAmazon forests on the verge of extinctionஅமேசான் காடுகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

Next Post

அனுமதி மறுப்பால் மக்கள் ஏமாற்றம் : அவசரகதியில் திறக்கப்பட்டதா செம்மொழிப்பூங்கா?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies