சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் - வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
Apr 29, 2026, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

பாத்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் குடியிருப்பி வாசி!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

“டிட்வா” புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம், ஆஜீஷ் உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்தனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஏழுமலை நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் வீடுகளுக்குள் தேங்கிய மழைநீரை, பாத்திரம்மூலம் குடியிருப்பு வாசிகள் வெளியேற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது எனவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: NEWS TODAYtoday newsHeavy rains in Chennai: Floodwaters accumulate in various places - motorists and the public are suffering greatlynewsfloodTodaychennai floodtn rain
ShareTweetSendShare
Previous Post

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள்!

Related News

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies